Gallery


  மனிதா


* உயர்ந்திடும் எண்ணம்
பறவைக்கும் உண்டு.....

*உழைத்திடும் எண்ணம்
எறும்புக்கும் உண்டு...

*இறைதேடும் பழக்கம்
விலங்குக்கும் உண்டு...

*சேர்த்து வாழும் பண்பு
பறவைக்கும் உண்டு...

*பகிர்ந்துண்டு வாழும் குணம்
காக்கைக்கும் உண்டு...

*பழிவாங்கும் தன்மை
பாம்பிற்கும் உண்டு...

*நன்றியை சொல்லும் நயம்
நாய்க்கும் உண்டு...

*அன்பு கட்டும் ஆற்றல்
கோழிக்கும் உண்டு...

*சேமிக்கும் குணம்
ஒட்டகத்திற்கும் உண்டு....

^மனிதா^

* உன்னிடம் உள்ள எல்லா
பண்பும் ஐய்ந்தறிவுள்ள உயிர்களுக்கும் உண்டு....

*ஆனால்*

*ஆறாவது அறிவாய் ஆண்டவன்
நம்மை பூமியில் படைத்தது
எதற்க்ககா?

***சிந்தித்து பார் மனிதா? ***

@ புறம் பேசும் பழக்கம்
விலங்குக்கு இல்லை...

*அடுத்தவரை ஏமாற்றும் குணம்
அதற்கு இல்லை...

*சொந்தமாய் பழகி சூழ்ச்சி செய்யும்
வழக்கம் அதற்கு இல்லை...

* கூட்டு வாழ்கையை இன்னும்
அது குழைக்கவில்லை...

*எந்த புறாவும் தன் ஜோடியன்று,
பிற ஜோடியை தொடுவதில்லை....

***சிந்தித்து பார் மனிதா? ***

^ இரண்டறிவு மரம் கூட மறித்தாலும்
மனிதனுக்கு பயன்படுகிறது.....

^ ஓரறிவு இனம் கூட
உரமாய் நமக்கு பயன்படுகிறது...

** ஆனால் நீ? **

யோசி மனிதா? யோசி*****

****ஆறாவது அறிவாய் ஆண்டவன்
நம்மை பூமியில் படைத்தது
எதற்காய்???


No comments:

Post a Comment

Welcome All